திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், சூலூர் கந்தசாமி, அருண்குமார், செல்வராஜ், அமுல் கந்தசாமி, சிங்காநல்லூர் ஜெயராமன் மற்றும் அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பில் இருந்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் தந்துள்ளனர். 50 ஆண்டுகள் அனைத்து இடங்களிலும் கொடிகம்பத்திற்கு பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று கூறினார்.
அனைத்து கம்பங்களிலும் கொடி ஏற்றுவதற்கு நிர்வாகிகள் செல்ல வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கூடிய பொதுக்கூட்டம் மாநாடு போல நடக்க வேண்டும். தற்போது திமுகவின் மீது அவ்வளவு எதிர்ப்பு உள்ளது. அதனால் பொதுமக்களே ஏராளமானோர் திரள்வர். திமுகவின் மிரட்டலுக்கு பயப்படாமல் ஐ.டி.விங் துணிச்சலுடன் பதிவிடுகின்றனர்.
இந்த ஆட்சியில் காவல்துறையினர், அதிகாரிகள் திமுக கட்சிக்காரர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள். ஜெயலலிதா மறைந்தாலும கூட ஒவ்வொரு திட்டங்கள் தமிழக மக்கள் வழியாக வாழ்ந்து வருகிறார். திமுக எதுவும் செய்யவில்லை. திமுக நீட்டை சொல்லி ஏமாற்றி வருகிறது. கோவையில் எப்போதும் இதுபோன்று இருந்ததில்லை. எங்கே பார்த்தாலும் சாலைகள் மோசமாக உள்ளது. பொதுமக்கள் திமுகவிடம் சாலைகள் போடுங்கள் என கேட்பதற்கே பொதுமக்கள் பயப்படுகிறார்கள் என்று கூறினார்.
தமிழகத்தில் எந்த திட்டங்களும் செய்யாமல் முதல்வராக இருப்பவர் ஸ்டாலின். எங்கே பார்த்தாலும் லஞ்சம். மோசமான ஆட்சி. அதிமுக கூட்டணி எடப்பாடி தலைமைக்கு தான் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்கள் தயாராகியுள்ளனர். கோவையில் சாலைகளில் இன்று நடக்கு முடியவில்லை. ஒட்டுமொத்த மக்களும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டார்கள். எப்போதும் தமிழகம் இந்தியை ஏற்றுக்கொள்ளாது. நாங்களும் அதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.