பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதிக்க 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள்
மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுகாதாரத் துறை சார்பில் அரசு
நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக மருத்துவ மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையிலிருந்து விமானம் மூலம்
மதுரை வந்தடைந்தார்.
தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பாக விமான நிலைய
வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
சுகாதாரத் துறை இணை இயக்குநர் அர்ஜுன் குமார், மதுரை மருத்துவக் கல்லூரி டீன்
ரத்தினவேலுவுடன் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை மருந்து
தயாரிக்க அஸ்வகந்தா சாகுபடி திட்டம் துவக்கப்படுகிறது. சாகுபடி செய்யும்
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில மூலிகை
தாவர வாரியம் என்று மத்திய விவசாய ஆராய்ச்சி நிலைய உதவியின் இந்தப் பணி
மேற்கொள்ளப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான
கூடுதல் கட்டடங்கள் என ஏழு கட்டடங்கள் திறந்து வைக்க இருக்கிறோம். மழைக்காலம் வருவதையொட்டி நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த கேள்வி எழுப்புகிறீர்கள். இதுசம்பந்தமாக ஏற்கனவே., ஒரு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த வகையில்
உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடையே ஒவ்வொரு வீடுகளிலும் தேங்கி நிற்கும் மழை
நீர் வெளியேற்றுவதற்கான சூழலை உள்ளாட்சி நிர்வாகம் செய்துள்ளது.
தொடர்ச்சியாக, மக்கள் நல்வாழ்வுத் துறை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக
தினந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு
நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த முகாமில் 20 லட்சம் மேற்கொண்டவர்களுக்கு மருத்துவ சிகிட்சை
அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம்
பள்ளி மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காய்ச்சல் கண்காணிக்கப்பட்டு
வருகிறது.
அந்த வகையில் வைரஸ் காய்ச்சல் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கான பாதிப்பு இருந்தது. தற்போது 30க்கும் கீழாக குறைந்திருக்கிறது. நேற்று 24 மணி நேரத்தில் 24 பேருக்கும் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்குவாக இருந்தாலும் கட்டுப்பட்டு உள்ளது. மருத்துவ தட்டுப்பாடு எங்கேயும் இல்லை வேண்டுமென்றால் மதுரை மருத்துவ
சேமிப்பு கிடங்கில் செய்தியாளர்கள் ஆய்வு செய்து கொள்ளலாம். அதற்கான அனுமதி
வழங்கப்படுகிறது.
இயக்குநர் விக்னேஷ்- நடிகை நயன்தாரா விவகாரம் குறித்து சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை முழுமையாக வந்த பிறகு அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தசையினர் சிதைவு நோயில் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் பிஸியோதரபி சிகிச்சை உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிட்சையில் குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தால் உரிய சிகிட்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்.








