மதுரை – தேனி ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள் என்று தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தென்னக இரயில்வே மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஸ்டார்ட் ஆஃப் என்கிற புதிய தொழில்நுட்ப தொழில் முனைவோரை ஊக்குவித்து அவர்களுடைய தொழில்நுட்பத்தை ரயில்வே துறையில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் 21 முதல் இணையத்தில் தொழில் முனைவோர் பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் 1 கோடியே 50 லட்ச ரூபாய் நிதியுதவி, தொழிலை விரிவுபடுத்த 3 கோடி ரூபாய் நிதியுதவி, புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ரயில்வே பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்வு செய்யப்பட்ட புதிய தொழில்நுட்பம் இந்திய ரயில்வே முழுதும் செயல்படுத்தப்படும். ரயில் பாதை விரிசலைக் கண்டறிவது, மின் பாதையை கண்காணிப்பது, உப்பு போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல எடை குறைவான சரக்கு பெட்டிகளை உருவாக்குதல், ரயில் பாதை சரளை கற்களை சுத்தப்படுத்தும் இயந்திரம், ரயில்வே மேம்பால பாதைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. ரயில்வே துறையால் தீர்க்க முடியாத 11 பணிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மதுரை – தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை நிறைவு பெற்றவுடன் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். மதுரை – தேனி ரயிலை சென்னை வரை நீட்டிக்கும் திட்டமில்லை. மதுரை – தேனி இடையே சரக்கு ரயில் இயக்க மதுரை ரயில்வே கோட்டம் தயாராக உள்ளது. பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் மதுரை – காசி – மதுரைக்கு தனியார் ரயில் இயக்க விண்ணப்பம் வந்துள்ளது. மதுரை – தேனி இடையே ரயில் இயக்குவது சவாலாக உள்ளது. ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள். செல்ஃபி எடுப்பது, ரயிலுக்கு மிக அருகில் நடந்து செல்வது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர்.
100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கும்போது மக்கள் குறுக்கே வருவதால் ரயிலை இயக்குவதில் சிரமம் உள்ளது. ஆபத்தை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். ரயில் வரும் என தெரிந்தே மக்கள் ரயில் பாதையில் செல்கிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வேண்டும் என மதுரை, தேனி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது.
-ம.பவித்ரா