PBKSvsRR | அதிரடி காட்டிய நேஹல் வதேரா – ராஜஸ்தான் அணிக்கு 220 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் அணிக்கு 220 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தின்போது ஒத்திவைக்கப்பட்ட 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று(மே.17) தொடங்கப்பட்டது. பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளின் நேற்றைய ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று(மே.18) பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்களும், ஷஷாங்க் சிங் 59 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் அடித்தனர்.

இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, 219 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 220 என்ற இலக்கை ராஜஸ்தான் அணி சேஸிங் செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.