அடுத்த தேர்தல்களில் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ஜனசேனா கட்சித்தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது 371 கோடி ரூபாய் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை ஜனசேனா கட்சிதலைவர் பவன் கல்யாண் சந்தித்து பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருப்பதே எங்கள் நோக்கம். அதனால் அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனாவும் இணைந்து போட்டியிடும்.
தற்போது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனசேனா கட்சி உள்ளது. பாஜக எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறையில் சந்திரபாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இதனை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என பவன்கல்யாண் தெரிவித்தார்.
கடந்த மக்களவை தேர்தலின் போது ஒரு இடத்தில் கூட ஜனசேனா கட்சி வெற்றி பெறவில்லை. எனினும் 6 சதவீத ஓட்டுக்களை அக்கட்சி பெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.