டோக்கியோ பாராலிம்பிக்கில் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பாவினா படேல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் டோக்கியோ நகரில் பாராலிம்பிக் போட்டி கடந்த 24ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 163 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்தியாவில் இருந்து 54 பேர் பங்கேற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பாவினா படேல் பிரேசிலின் ஜாய்ஸ் டி ஒலிவேராவை 3-0 என்கிற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்றைய போட்டியில் 12-10, 13-11, 11-6 என்ற புள்ளிகளுடன் 3-0 புள்ளிகளுடன் நேர் செட் கணக்கில் ஒலிவேராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.