அரைசதம் கடந்த ’பராசக்தி’

பராசக்தி திரைப்படம் 2 நாள்களில் உலகளவில் ரூ. 51 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணில் வெளியாகியுள்ள திரைப்படம் ’பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நூறாவது படமான பராசக்தியில் இருந்து வெளியான அடி அலையே, ரத்னமாலா, நமக்கான காலம் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மொழிப்போரை மையப்படுத்தி வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.  இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன் தினம் (ஜன.10) வெளியானது. பராசக்தி படம் முதல் நாள் வசூலாக ரூ. 27 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பராசக்தி திரைப்படத்தின் 2 ஆவது நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் பராசக்தி திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் 51 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக  அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.