முக்கியச் செய்திகள்தமிழகம்பக்தி

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் உடன் இணைந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோயில், ஆடல் வள்ளல் நடராஜப் பெருமானின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபையாக திகழ்கிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 14-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான காரைக்கால் அம்மையார் புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப நாக ஊஞ்சல் நிகழ்வு நேற்று (மார்ச் 26) இரவு கோலகலமாக நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் இன்னிசை பரதநாட்டிய கச்சேரி நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்தனர். இந்த திருவிழா இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழ்நாடு அரசு தகவல்

G SaravanaKumar

8-ஆம் வகுப்பில், ஒன்பது புத்தகம்: சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்

Arivazhagan Chinnasamy

மாமல்லபுரம் – குஜராத்… முதலைகள் இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading