கிராம சபை கூட்டம்; சிபிஎம் வலியுறுத்தல்

ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், “வருகிற ஆகஸ்ட் 15 அன்று நடைபெற உள்ள கிராம…

ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், “வருகிற ஆகஸ்ட் 15 அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்கள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிராம சபை கூட்டங்கள் என்பது மக்கள் நேரடியாக பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளையும், தேவைகளையும் அரசுக்கு தெரிவிக்கும் ஜனநாயகத்தின் மிக முக்கியமானதொரு வடிவம் ஆகும். எனவே கிராம சபை கூட்டங்கள் உரிய முறையில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.”

“மேலும் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதோடு, நோய்த் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நிலைமைகேற்ப படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதோடு, கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு ஆகஸ்ட் 15 அன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்திட முன்வர வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கிராம சபை கூட்டத்தை கண்டு திமுக அஞ்சுகிறது என விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.