பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டு அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் டிவிட்டர் பக்கத்திற்கு சென்றால், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று டிவிட்டர் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒருநாட்டின் சட்ட விதிகளுக்கு மாறாக இருந்தால், உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று டுவிட்டர் நிறுவனம் இதுபோன்று கணக்குகளை நிறுத்தி வைக்கும் நடைமுறையை மேற்கொண்டு வருகிறது. எனினும், பாகிஸ்தான் அரசின் டிவிட்டர் பக்கம் நிறுத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது எதற்காக என்ற விவரம் வெளியாகவில்லை.
அதன்படி, உள்நாட்டு சட்டங்களை மீறும் வகையில் கருத்துகள் இடம் பெற்றதால், மத்திய அரசு அதிகாரிகளிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையை ஏற்று, டிவிட்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.