டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு வழங்கப்பட்ட மறைவுக்குப் பிந்தைய பத்ம விபூஷன் விருதை அவரது மகள்கள் கிரித்திகா, தாரிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், குருமித் பாவா, சந்திரசேகரன், தேவேந்திர ஜஜாரியா, ரஷித் கான், ராஜீவ் மெஹ்ரிஷி, டாக்டர் சைரஸ் பூனாவாலா, சச்சினாந்த சுவாமி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. திரைப்பட இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதி, ஹாக்கி வீராங்கணை வந்தனா கட்டாரியா, துப்பாக்கிச் சுடும் வீராங்கணை அவானி லெகாரா உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் உள்பட 4 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், ஷெனாய் இசை கலைஞர் பீலேஷ் பஜாந்த்ரி, கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், சதுராட்ட கலைஞர் முத்து கண்ணம்மாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.