புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர்
முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை தந்தை பெரியார் திராவிட கழகம் நிர்வாகி காளிதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீதர், இந்தியத் தேசிய இளைஞர் முன்னணி இயக்கத்தின் தலைவர் கலைபிரியன், புதுச்சேரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் ஜெபின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும், கருப்பு பலூன் பறக்கவிட திட்டமிட்டு இருந்ததால் பலூன் விற்பனையாளர் ஜெய்சங்கரை சிலிண்டர் உடன் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில், பாரதியார் நினைவு இல்லத்தையும், அரவிந்தர் ஆசிரமத்தையும் பார்வையிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. திட்டமிட்டப்படி மற்ற சந்திபுகளுக்கு பிறகு அவர், மாலை 5:30 மணியளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புவார் எனவும், சென்னை வரும் அவர், மாலை 6:15 மணியளவில் எல்லை பாதுகாப்புப் படையின் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.