நாளை தொடங்க உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், முதல் நாளன்று நீர்வளத்துறை மானியகோரிக்கையில் அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு நாளை முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறுகின்றது. தினந்தோறும் கேள்வி நேரம், 110-ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள், மானியகோரிக்கை மீது அமைச்சர்கள் பதிலுரை ஆகியவை இடம் பெறுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேள்வி நேரம் மட்டும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. நாளை முதல் நாளன்று நீர்வளத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகின்றது. துறை ரீதியான விவாதங்களுக்கு பதிலளித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை வரும் 16-ந்தேதி வரை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் பிரத்யேக நேரலையாக காணலாம்”
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்த விவாதங்களை அவையில் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் அவையில் பிரச்னையை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகியவை குறித்தும் அதிமுக, பாஜக கட்சிகள் பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.