31.4 C
Chennai
June 17, 2024
தமிழகம் செய்திகள்

உதகையில் மே 19-ல் 125-வது மலர் கண்காட்சி!

நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார்.

தமிழக சுற்றுலாத் தளங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மிக முக்கியமான ஒன்றாகும். மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு
ஆண்டும் நடைபெறும் கோடை விழாவினை ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இதமான குளுகுளு கோடை சீசனை ரசித்து செல்ல லட்சக்கணக்கானோர் வருவர்,அவர்களை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக நடத்தப்படும் கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அனைத்து துறை அதிகார்களுடன்  மாவட்ட ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் மே 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது.மேலும் முதல் நிகழ்ச்சியான காய்கறி கண்காட்சி நேரு பூங்காவில் மே 6,7ம் தேதியும்,ரோஜா கண்காட்சி ரோஜா பூங்காவில் மே13 முதல் 15 வரையும்,குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும்,கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும் நடைபெறுகிறது.கண்காட்சிக்காக 170 ரகங்களில் சுமார் 5 லட்சம் மலர்களை உற்பத்தி செய்யும் பணி தொடங்கியுள்ளது என்றார்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading