தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் – ஆர்.கே.செல்வமணி!

தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அலுவலகத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்…

தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அலுவலகத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒழுங்கு விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிகள் குறித்தும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்களை ஒழுங்குமுறை படுத்துவது குறித்தும் பேசினார்.

மேலும், இந்த வருடத்தில் தொடங்கும் 24 தொழிலாளர்கள் சங்கங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு லட்சம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ் திரைப்படத்துறை சீராக ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும் எனவும் அதற்காக சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தயாரிப்பாளர் சங்கம் முறையாக தெரிவித்துவிட்டு தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என தெரிவித்தார்.

அனைத்து துறைகளையும் ஒன்றிணைக்க திரைப்பட தொழிலாளர் சங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார். மேலும் தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். கதை உரிமைகளில் பிரச்னை ஏற்பட்டால் இயக்குனர்களை பொறுப்பேற்க வேண்டும் எனவும், எத்தனை நாட்கள் படப்பிடிப்பு படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் எவ்வளவு என இயக்குனர் முறையாக திட்டமிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

திரைப்படத்தின் அனைத்து லொகேஷன்களையும் முடிவு செய்த பிறகு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் எனவும், இயக்குனர் தெரிவித்த காலக்கெடுவிற்குள் மற்றும் பட்ஜெட்டில் திரைப்படத்தை முடிக்க வேண்டும் எனவும் கூறினார். திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், ஔிப்பதிவாளர், கலை இயக்குநர், சண்டை பயிற்சியாளர், நடன இயக்குநர், சினிமா மேலாளர், ஆவுட் டோர் யூனிட் உள்ளிட்டவற்றில் பல நிபந்தனைகளை தெரிவித்தார்.

மேலும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பாதுகாப்பற்ற முறைகள் நடைபெறும் படப்பிடிப்புகளில் தொழிலாளர் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறினார். இந்த ஆண்டு மட்டும் 6 தொழிலாளர்கள் படப்பிடிப்புகளில் ஏற்பட்ட விபத்துகளில் இறந்து உள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.