ஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியால் நேர்ந்த கொடூரம்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் கேம் மற்றும் கேரளா லாட்டரியில் ரூ.18 இலட்சத்திற்கு மேல் பணம் இழந்த ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட  சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன்…

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் கேம் மற்றும் கேரளா லாட்டரியில் ரூ.18 இலட்சத்திற்கு மேல் பணம் இழந்த ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட  சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் கேம் விளையாடும் சில நபர்கள் அதற்கு அடிமையாகி பண இழப்பை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகி  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் கேம் தடை செய்யப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தில் வசித்து வரும் பிரபு என்பவர் தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி அதற்கு அடிமையாகியுள்ளார். இதனால் சுமார் ரூ.15 லட்சத்திற்கும் மேல் பணம் இழந்துள்ளதாகவும், அதே போல் கேரளா லாட்டரியில் ரூ.3 லட்சத்திற்கு மேல் இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய பிரபு அவருடைய வீட்டில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் இவர் தனது சொந்த வீட்டை விற்க முயற்சித்து அதில் பெறப்பட்ட முன் தொகையை ஆன்லைன் ரம்மியில் விளையாடுவதற்கு பயன்படுத்தியுள்ளதாகவும், இதில் ஏமாற்றம் அடைந்ததால் அவர் உயிரிழப்பு  செய்துள்ளார் என கிராம மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேரளா லாட்டரி விற்பனையை தமிழகத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.