தமிழ் புத்தாண்டில் திருநேர் அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுக்கு
ஒரு முறை அண்ணாமலையாரை சூரியன் தரிசனம் செய்யும் அதிசய நிகழ்வு
நடைபெற்றது.
ஒவ்வொரு தமிழ் புத்தாண்டிலும் அதிசய நிகழ்வாக , திருநேர் அண்ணாமலையார்
கோயிலில் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழும்.
இந்த நிகழ்வை , சூரியன் சிவ லிங்கத்தினை புத்தாண்டு அன்று தரிசனம் செய்யும்
நிகழ்வாக கருதுவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வை
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும், இந்த நிகழ்வையொட்டி இன்று அதிகாலையில் திருநேர் அண்ணாமலையார்
கோயில் திறக்கப்பட்டு , அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மல்லி,
தாமரை பூ உள்ளிட்ட பல்வேறு வண்ணபூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு
பூஜைகள் நடைபெற்றது. வருடத்திற்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வையும், திருநேர்
அண்ணாமலையாரின் தரிசனத்தையும் ஏராளாமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—-கு.பாலமுருகன்