நாடு முழுவதும் பரவி வரும் ஒமிக்ரான வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ், வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் தொற்றால் நாட்டில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 90 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், 123 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். மேலும், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக 10 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்று பரவல் கண்டறியப்படும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பதுடன், அனைவருக்கும் தடுப்பூசி என்பதை நிலை நிறுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போதைய ஒமிக்ரான் கொரோனா வகை 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர கட்டுப்பாடு விதிக்க மாநில, மாவட்ட நிர்வாகம் உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். ஒமிக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.