முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயருமா? அமைச்சர் சொல்வது என்ன

அரசின் நிதிநிலை சரியான பிறகு முதியோர் உதவித்தொகையை 1500 ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வுக்…

அரசின் நிதிநிலை சரியான பிறகு முதியோர் உதவித்தொகையை 1500 ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், சென்னையில் வருவாய்த் துறை பணிகள் விரைந்து நடைபெற வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் உள்ளிட்டவை விரைவாக கொடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதே போல் முதியோர் ஓய்வூதியத் திட்டம், விடுதலை ஓய்வூதியம், சொத்து சான்றிதழ் உள்ளிட்டவை நிலுவையில் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணப் பணிகளில் சுணக்கம் ஏற்படாத வண்ணம், தேவையான பணத்தை செலவு செய்து பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவை அடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து பணிகள் மேற்கொள்ளப்படுவதை நானும், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டோம். முன்னெச்சரிக்கையாக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேதங்கள் தவிர்க்கப்படும். இந்த வருடம் சென்னையில் மழைக் காலத்தில் மழை நீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகளானது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் தாமதம் இல்லாமல் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரகு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்கள் சான்றிதழ் எரிந்தது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து முதல்வருடம் ஆலோசித்து வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கும். அரசின் நிதி நிலைமை சீரான பிறகு முதியோர் ஓய்வூதியத் தொகை 1500ஆக உயர்த்த
முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள பேரிடர் நிதி நமது தேவையைப் பொறுத்தே கேட்டுள்ளோம். ஆனால், போதிய நிதியைக் கொடுப்பதில்லை. ஆனால், பேரிடர் நேரத்தில் மாநில நிதியை செலவழித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.