தோசையில் எண்ணெய் ஊற்றியது குற்றமா? உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில்…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால்
ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில் கௌதமன்
என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அசைவ உணவகம் நடத்தி வந்துள்ளார்.  இந்த நிலையில்,  இவரது கடைக்கு சாப்பிடுவதற்காக பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்துள்ளனர்.  இதனையடுத்து அவர்கள் எண்ணெய் ஊற்றாமல் தோசை வேண்டுமென கேட்டுள்ளனர்.

ஆனால் கடை ஊழியர் தோசையில் எண்ணெய் ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அனைவரும் கடை உரிமையாளர் கௌதமனை கடுமையாக தாக்கியுள்ளனர்.  அதனுடன் கடையில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டும் உரிமையாளரை தாக்கியுள்ளனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதில் காயமடைந்த கௌதமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கௌதமன் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல்துறையினர் திருவாவடுதுறை பிள்ளையார் தோப்பு பகுதியை சேர்ந்த திவாகர், ராஜராஜன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.