சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனை தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் 20 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்கள் கருத்துக் கேட்டதற்கு, பட்ஜெட் நிதிநிலை அறிக்கை வெளிவந்தவுடன் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் என்று ஓபிஎஸ் கூறினார். மேலும் டிடிவி தினகரனுடன் சேர்ந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, வாய்ப்பு இருந்தால் இணைந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் திடீர் ராஜினாமா
சசிகலா சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை சட்ட விதிமுறைக்கு எதிராகவேதான் உள்ளது என்றும் கூறினார். மேலும் பொதுக்குழு குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கான கேள்விக்கு மக்கள் தீர்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறினார்.







