புதுச்சேரி மாநிலத்தில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பின்னடைவு பெற்றுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஓரணியாகவும், எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
கடந்த மாதம் 6 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் காலை முதலே என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஏனாம் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி பின்னடைவு பெற்றுள்ளார்.







