வடகிழக்கு பருவமழை; மின்சாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர் தகவல்

வடகிழக்கு பருவமழை  தொடங்கவுள்ளதையடுத்து மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது; சென்னை அண்ணாசாலையில் உள்ள…

வடகிழக்கு பருவமழை  தொடங்கவுள்ளதையடுத்து மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது; சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும், சென்னையில் இருப்பவர்கள் நேரடியாக பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறையில் வடகிழக்கு பருவமழைக்கான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று
வருகிறது. சென்னையில் 9500 கிலோ மீட்டர் அளவில் கம்பிகள் தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், 2400 பில்லர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில், பூமி கம்பிகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் துணை மின்நிலையங்களில் உள்ள பிற பாதுகாப்பு கருவிகள் தயார் நிலையில் வைத்திருத்தல், அனைத்து மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள் கழிவுநீர்
உந்தி நிலையங்கள், மேல்நிலை தொட்டிகள் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுவதோடு, இறுதிக்கட்டத்தில் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்படும் என குறிப்பிட்டார்.

அதேபோல், மின்னகத்தில் ஒரே நேரத்தில் தற்போது 60 அழைப்புகள் பேசக்கூடிய நிலையில், வடகிழக்கு பருவமழை நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து அதிக அழைப்புகள் வரும் என்பதால் அதனை 75 ஆக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.