கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வருவதாக இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது . இதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
தேர் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம், திருமண மண்டபம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும் பீகாரிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி வருவதாக இருந்தது. அங்கிருந்து திருவாரூருக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.







