சேலத்தில் நடைபெற்ற மயானக் கொள்ளையில் சுடுகாட்டுக்குச் சென்று சாம்பலை பூசிக் கொண்ட பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை பற்களால் கடித்து சூறையிட்டனர்.
மாசி மாத அமாவாசையான இன்று சேலத்தில் மயானக் கொள்ளை நடைபெற்றது. மிகவும் பிரசித்த விழாவான மாயனக் கொள்ளை ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். மாயனக் கொள்ளையை முன்னிட்டு சேலம் ஜான்சன் பேட்டை, காக்காயன் சுடுகாடு மைதானத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்காளம்மன் வேடமணிந்து பக்தர்கள் வருகை புரிந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 15 நாட்களாக கடுமையான விரதமிருந்து இரவு முழுவதும், அமாவசை தினமான நேற்று பூஜைகள் நடத்தி, காலையில் ஆடல் பாடலுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள், சுடுகாட்டுக்கு சென்று அங்குள்ள சாம்பலை தங்கள் உடல் மீது பூசிக் கொண்டு நடனமாடினர். ஆடு, கோழிகளை பற்களால் கடித்து பலி கொடுத்தனர். மேலும் ரத்தத்தை சோற்றில் கலந்து சூறையிட்டனர்.
அப்பகுதி மக்கள் சாலையில் படுத்து காளி வேடமணிந்து வந்த பக்தர்களிடம் ஆசி பெற்றனர். அப்போது காளி வேடமணிந்தவகர்கள் ஆக்ரோஷமாக ஒலி எழுப்பி அருளாசி வழங்கினர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புகைப்படம்: கேசவ்மூர்த்தி மாணவ ஊடகவியலாளர்