கிருஷ்ணகிரியில் நியூஸ்7 தமிழ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று துவங்கியது. மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் கல்வி கண்காட்சியை நடத்தி வருகிறது. மதுரை, கோவை, சென்னை, சேலம் மாவட்டங்களை தொடர்ந்து இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கல்வி கண்காட்சி பிரம்மாண்டமாக துவங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் தலைமையில் நடைபெற்ற இந்த கல்வி கண்காட்சியை மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முன்னணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதற்கான வசதி உள்ளிட்டவை கல்வி கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன்.
இந்த கல்வி கண்காட்சியில் பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக மதிபெண்கள் பெற்ற முதல் 5 மாணவிகளுக்கு பரிசாக தலா 1 கிராம் தங்க நாணயம், வழங்கப்பட்டது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நியூஸ் 7 தமிழ் நடத்தும் இந்த மாபெரும் கல்வி கண்காட்சியில் மாணவர்கள் அனைவரும் கட்டணமில்லாமல் கலந்து கொள்ளலாம்.