முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் அருகே பாலின சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பழஞ்சூர் லயோலா கல்லூரி:

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பழஞ்சூரில் அமைந்துள்ள லயோலா கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பூந்தமல்லி காவல்துறை உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் பேசிய முத்துவேல் பாண்டியன், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு மற்றும் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்தை நடத்தி வரும் நியூஸ் 7 தமிழுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உறுதிமொழி எடுத்ததை வாழ்க்கையிலும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த தென்கரையில் உள்ள விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாலின சமத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த அவர், பாலின சமத்துவத்தை, வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

Jeba Arul Robinson

“தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்டப்படாது”

G SaravanaKumar

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து: 5பேர் உயிரிழப்பு

Niruban Chakkaaravarthi