பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ- மாணவியர் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் சரகம்:
அந்த வகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் சரகத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள், காக்கியிலிருந்து கலர் உடைக்கு மாறி மகளிர் தினத்தை கொண்டாடினர். இந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றதோடு, மாதவிடாய் கையெழுத்து இயக்கத்திலும் கையொப்பமிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு பலநோக்கு சேவை மையம்:
புதுக்கோட்டை மாவட்டம் , பெண்கள் கூட்டமைப்பு பலநோக்கு சேவை மையம் மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து 27-ஆம் ஆண்டு அகில உலக பெண்கள் தின விழாவினை ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்தில் கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள “நிகரன கொள்” உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மாதவிடாய் விடுமுறை விழிப்புணர் கையெழுத்து இயக்கத்தை , அருட்தந்தையர்கள் சவரிநாயகம், அருளானந்து, பலநோக்கு சேவை மையம் இயக்குனர் அருட்தந்தை P. யாகப்பா ராஜரத்தினம் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மகளிர் தின விழாவில் பங்கேற்ற 600-க்கும் மேற்பட்ட பெண்கள் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் கையெழுத்து இட்டு சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசினர் தொடக்கப் பள்ளி:
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசினர் தொடக்கப் பள்ளியில் ,நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் பாலின சமத்துவத்திற்கான ” நிகரென கொள்” கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமையாசிரியர் ஆர்டர் அவர்கள் உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் பாலின சமத்துவ படிவத்தில் கையொப்பமிட்டு இயக்கத்தில் பங்கு பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், நியூஸ் 7 தமிழ்
முன்னெடுத்துள்ள பாலின சமத்துவத்திற்காகன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் நிலக்கோட்டை பேரூராட்சி துணைத்தலைவர் எஸ் பி முருகேசன், வார்டு உறுப்பினர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சௌந்தரராஜன், விக்டரி அறக்கட்டளை நிறுவனர் முகமது மீரா உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். மேலும் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் விக்டரி அறக்கட்டளை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அனைவரும் பாலின சமத்துவ படிவத்தில் கையொப்பமிட்டு இயக்கத்தில் பங்கு பெற்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா