பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை, களக்காடு எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
களக்காடு எஸ்டிபிஐ கட்சி:
நெல்லை மாவட்டம், களக்காட்டில் நியூஸ் 7 தமிழ் முன்னெடுக்கும் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட களக்காடு எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். இதனை எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாதவிடாய் விடுமுறை விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதிலும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆர்முடன் கையொப்பமிட்டனர்.
சேலம் ஏ.வி.எஸ் கல்லூரி:
சேலம் ஏ.வி.எஸ் கல்லூரியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கார்மெல் மெர்சி பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய கல்லூரி முதல்வர், நியூஸ் 7 தமிழின் முயற்சி சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து, மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
நெல்லை, பணகுடி புனித அன்னாள் ஐ.சி.எஸ்.இ பள்ளி:
நெல்லை மாவட்டம், பணகுடி புனித அன்னாள் ஐ.சி.எஸ்.இ பள்ளியில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் அருட்சகோதரி சிபி அன் தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து மாதவிடாய் விடுமுறை விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதிலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
பாளையங்கோட்டை விளையாட்டு வீரர்கள்:
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பாலின சமத்துவ உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து மாதவிடாய் விடுமுறை விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதிலும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். மேலும் இதுமாதிரியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நியூஸ் 7 தமிழுக்கு மாணவர்களும், பயிற்சியாளர்களும் நன்றி தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா