முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நிகரென கொள் என்ற விழிப்புணர்வு இயக்கத்தை மாநிலம் முழுவதும் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் அமிர்த வித்யாலயா பள்ளியில் நிகரெனக் கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை பகுதியில் உள்ள அமிர்த வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஹரிணி அனு முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற மாதவிடாய் கையெழுத்தியத்திலும் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.

கன்னியாகுமரி ரோகினி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பாலின சமத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து பாலின சமத்துவம் குறித்த நிகரென கொள் உறுதிமொழியை 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தி நடைபெற்ற மாதவிடாய் கையெழுத்தியத்தில் மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருமாநாடு பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பாலின சமத்துவ உறுதிமொழி இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு அளிக்க வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்திலும் கையெழுத்திட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நிகரென கொள் பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனையும், தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியனுமான நிவேதா ஜெசிக்கா கலந்துகொண்டு பேராசிரியர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’நன்றிங்கறது சின்ன வார்த்தைதான்’: மருத்துவமனையில் இருந்து பிரபல நடிகர் ட்வீட்

Halley Karthik

நியாயவிலைக்கடைகள் எண்ணிக்கை அதிகரிப்பு? – அமைச்சர் ஐ.பெரியசாமி

G SaravanaKumar

தமிழகத்தில் குரங்கு அம்மை அச்சம்: அமைச்சர் விளக்கம்

EZHILARASAN D