பாலின சமத்துவத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தனியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அந்தனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் பார்மசி கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி செயலாளர் அறவாழி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட மருந்தியல் கல்லூரி மாணவர்கள், பங்கேற்றுப் பாலின சமத்துவ உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வலியுறுத்தும், இயக்கத்தில் மாணவிகள், பேராசிரியர்கள் கையெழுத்திட்டனர்.
மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிப்பது தொடர்பாக, கல்லூரி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனறும் கல்லூரி செயலாளர் அறவாழி தெரிவித்தார்.
இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரில், நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,திரைப்பட நடன தொகுப்பாளர் வைதேகி, கல்லூரி செயலர் ரமேஷ் ஆகியோரது தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பாலின சமத்துவ உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து மாதவிடாய்க் காலாத்தில் மகளிருக்கு விடுப்பு வழங்க வலியுறுத்தும், இயக்கத்திலும் கையெழுத்திட்டு ஆதரவை தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா