உலகம் முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் கொண்டாட்டங்களை தடுக்க பாதுகாப்புப் பணியில் 13,000 போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடற்கரையில் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து காவல்துறை அறிவித்துள்ளதாவது, இரவு முதல் நகரம் முழுவதும் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.
இரவு 12 மணி முதல் சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுகின்றன. விடிய விடிய வாகன சோதனையில் போலீசார் ஈடுபட உள்ளனர். காவல்துறை அறிவிப்பை மீறி பொது இடங்களில் கூட்டமாகவோ அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.
அதேபோல இரவு நேரத்தில் பைக் ரேஸ் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.