‘வாடிவாசல்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!

‘விடுதலை பாகம் 2’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி, வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா…

‘விடுதலை பாகம் 2’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி, வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.

வாடிவாசல் திரைப்படம், விடுதலை படத்திற்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டார். விடுதலை இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளில் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் அந்த காட்சிகளை மீண்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த வேலைகள் எல்லாம் முடிந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு இந்த ஆண்டு இறுதியை எட்டிவிடும் என்பதால் மீண்டும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்டது. ஆனாலும் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்திற்காக காளை ஒன்றை வளர்த்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.

கங்குவா படத்திற்கு பின் சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வாடிவாசல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும் விடுதலை – 2 படப்பிடிப்பை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை அவர் துவங்குவார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், வாடிவாசல் படத்தின் திரைக்கதை பணிகளை முழுவதுமாக வெற்றிமாறன் முடித்து விட்டதாகவும், அதற்காக நடிகர் நடிகைகளிடம் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.