இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பரவல் உலகத்தையே ஆட்டிப்படைத்து. இந்த கொரேனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி உலக நாடுகளையே முடக்கியது. கடுமையான கட்டுபாடுகள், தடுப்பூசி என தற்போது கட்டுக்குள் கொரோனா பரவல் கொண்டுவரப்படுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: பெண் தலைமை நீதிபதிகள் இல்லாத உயர்நீதிமன்றங்கள்; வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்நிலையில், இஸ்ரேலில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரேலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு BA.1 (Omicron) மற்றும் BA.2 வகைகளின் கலவையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகை வைரஸ் காரணமாக பென்-குரியன் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட RT-PCR சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஒமிக்ரான் வகை கொரோனா குறைந்து வரும் நிலையில், தற்போது BA.2 வகை வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த வாரம் இஸ்ரேலில் 6,310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 335 நோயாளிகள் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், 151 பேர் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிசிக்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 4க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.