30.6 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

நாளை திறக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டடம்; ஆதீனத்திடம் செங்கோலை பெற்ற பிரதமர் மோடி!…

நாளை புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட இருக்கும் நிலையில் தமிழகத்திலிருந்து சென்ற ஆதீனத்திடம் பிரதமர் மோடி செங்கோலை பெற்றுக் கொண்டார். 

டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் சிங் தாக்கூர், கிஷன் ரெட்டி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும், அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கபட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.இந்த பயணத்தில் திருவாடுத்துறை ஆதீனம், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட 12 பேர் சென்றனர்.

இந்நிலையில் , இதற்கிடையே டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆதினங்களைச் சந்தித்து அவர்களிடம் இருந்து செங்கோலைப்  பெற்றார்.இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடன் இருந்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading