நியோ கோவ் என்ற புதுவகை கொரோனா வவ்வால்களில் காணப்படுவதாகவும், அது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
2019 ஆம் சீனாவில் தொடங்கி பின் உலகமெங்கும் பரவி கொரோனா தொற்று அச்சுறுத்தி வந்தது. முதலில் கொரோனாவாக இருந்த இந்த வைரஸ் நாளடைவில் ஒமிக்ரான், டெல்டாகிரான், பிஏ 2 என பல வகைகளாக உருமாற்றம் அடைந்தது. புதிய புதிய உருமாற்றங்களுடன் வந்து மக்களை பரபர்ப்பாகவே வைத்திருக்கும் இந்த வைரஸ் தற்போது புதிய வகையில் உருவம் எடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தென்ஆப்ரிக்காவில் வவ்வால்களை ஆய்வு செய்த போது அவை நியோ கோவ் என்ற புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த வகை தொற்று மேலும் பிறழ்வு அடையும் பட்சத்தில் மனிதர்களுக்கு தீங்கும் தரும் கொரோனா வகையாக மாறக் கூடும் என்று சீன விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் இந்த நியோ கோவ் என்ற தொற்று முதலில் 2012ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஒரு வைரல் தொற்றாக அறியப்பட்டது என்றும் இது மத்திய கிழக்கு சுவாச சிண்ட்ரோமுடன் தொடர்புடையது என்றும் சொல்லப்படுகிறது. இப்போதைய வடிவில் நியோ கோவ் மனிதர்களில் தொற்றக் கூடிய வடிவில் இல்லை என்றும், மேலும் பிறழ்வு அடையும் பட்சத்தில் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.