மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 26,533 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28,156 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,79,284 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 5,246 ஆகக் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 3,448 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,261 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், 1,779 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 1,387 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அண்மைச் செய்தி: வெளியானது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,662 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 665 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 695 பேருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 779 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 921 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 48 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.