தமிழகம் செய்திகள்

நெல்லை மாவட்ட மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்.! 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

நெல்லை மாவட்டம், கூடுதாழை பகுதியை சார்ந்த மீனவர்கள் தொடர்ந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் உவரியை அடுத்த கூடுதாழை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை கிராமத்தில் அலையின் வேகத்தால் கடல் அரிப்பு ஏற்படுவதாகவும், இதனால் படகுகள் நிறுத்துவதற்கு கூட இடமில்லாமல் போவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் இப் பாதிப்பினால் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். இந் நிலையில் கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நான்காவது நாளான கடலுக்கு செல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் என 250க்கு மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாணவி சத்யா கொலை வழக்கு – சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

EZHILARASAN D

கோவில்பட்டியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி!

Jayasheeba

ஈசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் ஏன்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

Arivazhagan Chinnasamy