தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவளித்து பேசினர். மசோதாவை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர், நீட் விலக்கு பெற வேண்டியதின் அவசியத்தை அவையில் எடுத்துரைத்தார் முடிவில், சட்டப்பேரவையில் இருந்த அனைத்துக் கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததால் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
அண்மைச் செய்தி: இனி ஊழியர்களுக்கு வார சம்பளம்! யாருக்கு தெரியுமா?
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதையடுத்து மாலை 5.30 மணி அளவில் நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. 3வது முறையாக நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.