ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது தனியார் நிறுவனமான “இந்தியா மார்ட்”.
இந்தியா உட்பட பல நாட்களில் தினக்கூலி, வாரக்கூலி நடைமுறைகள் ஏற்கனவே, இருக்கிறது என்றாலும் ஒரு பெரிய நிறுவனம் வார சம்பளம் முறையை அமல்படுத்துவது இதுவே முதல் முறை. இந்த நடைமுறையை, முயற்சியை இந்தியா மார்ட் நிறுவனம் தற்போது முன்னெடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் சம்பளம் / காசோலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் – பாஜக தேர்தல் அறிக்கை
இதுகுறித்து, இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான தினேஷ் குலாதி கூறியதாவது,“வார சம்பளம் ஊழியர்களுக்கு வெகுவாக பயனளிக்கும். இதன்மூலம் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள முடியும். சரியான திட்டமிடலுடன் நிதி நெருக்கடி இல்லாமல் வாழ முடியும்.” என இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








