நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக விவாதிக்கத் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க அவை தலைவர் மறுப்பு தெரிவித்தார். எனவே நீட் விவகாரம் குறித்தும், ஆளுநரின் நடவடிக்கை குறித்தும் விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஆளுநரின் செயல் குறித்து விவாதிக்க வேண்டும் என எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, கேள்வி நேரம் தேவையில்லை என்றால் கூட பரவாயில்லை, திமுகவின் கோரிக்கையை விவாதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார். ஒரு மாநில சட்டமன்றம் அனுப்பக் கூடிய ஒரு மசோதாவை ஒரு ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும் ? என திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு எம்பிக்களின் கோரிக்கை குறித்து தற்போது விவாதிக்க அனுமதிக்க முடியாது என்றும், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசுங்கள் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி தராததால் அவையின் மையப்பகுதிக்கு வந்த திமுக எம்பிக்கள். அட்ராசிட்டி டவுன் டவுன் என்ற முழக்கத்தை எழுப்பினர் அதன் தொடர்ச்சியாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.