என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், சியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எம்.எஸ்.எஸ் வக்பு போர்டு கல்லூரி வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான கிரிக்கெட்
போட்டி தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மண்டலத்தில், கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் உள்ள மைதானத்தில் எம்.எஸ்.எஸ் வக்பு போர்டு கல்லூரியும், சியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் மோதிக்கொண்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : அனுஷ்கா ஷர்மா – ரீசண்ட் க்ளிக்ஸ்
இதில் டாஸ் வென்ற எம்.எஸ்.எஸ் வக்பு போர்டு கல்லூரி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்களுக்கு சுருண்டது.
அதனை தொடர்ந்து 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எம்.எஸ்.எஸ். வக்பு போர்டு கல்லூரி 6 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்தது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடி காட்டிய எம்.எஸ்.எஸ் வக்பு போர்டு கல்லூரியின் ஃபாசில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, 17 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.