முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் பட்டியாலா சிறையிலிருந்து இன்று மாலை விடுதலையானார்.
33 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே 20 ம் தேதி பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாகக் கடந்த 1988 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது.
இதில் நடந்த மோதலில், காரை ஓட்டி வந்த குர்னாம் சிங் என்பவரை நவ்ஜோத் சிங் சித்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஹரியானா நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து நவ்ஜோத் சிங் சித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 33 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு மே 20 ம் தேதி பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் நன்னடத்தை காரணமாக 317 நாட்கள் கழித்து இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாட்டியாலா சிறையிலிருந்து வெளியில் வந்த அவரை ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மேள தாளம் முழங்க வரவேற்றனர்.







