முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

தெருநாய்களை விஷம் வைத்து கொலை செய்த மர்ம நபர்கள் – போலீஸார் விசாரணை

கோவை வடவள்ளியில் 5 தெருநாய்களை விஷம் வைத்து கொலை செய்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை நாகராஜபுரம் – பேரூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்
அப்பகுதிக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மர்ம நபர்கள்
சிலர் உணவில் விஷம் கலந்து நாய்களுக்கு வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை உண்ட 5 தெரு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் பாபுராஜ் (47) என்பவர் வடவள்ளி போலீஸில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் திருடுவதற்காக நோட்டமிட்ட நபர்கள் யாரேனும் நாய்களுக்கு விஷம் வைத்தனரா? அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒரே பயணச்சீட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

NAMBIRAJAN

ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர்!

Jeba Arul Robinson

நுபுர் சர்மாவை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை-மகாராஷ்டிர அரசு

Web Editor