என்னில் சிறந்த பாதி என்ற குறிப்புடன் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இணையத்தை கலக்கியுள்ளார் ஐபிஎல் புகழ் லலித் மோடி.
பாலிவுட்டையும் கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாது என்பதற்கு, சமீபத்திய உதாரணமாக அமைந்திருப்பது லலித் மோடி சுஷ்மிதா சென் ஜோடி. சிறுவயது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், வியாபார நுணுக்கங்களில் கில்லாடியாக திகழ்ந்தவர் லலித் மோடி. தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை செய்ய தொடங்கினாலும், அதில் பல்வேறு மாற்றங்களை கையாண்டு வெற்றிகரமாக மாற்றினார். இவரது முன்னெடுப்பில் உருவானது தான் இன்று உலகமே வியக்கும் வண்ணம் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி. இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியிருக்கும் ஐபிஎல் தொடரின் தொடக்கத்திற்கு இவரே முக்கிய காரணம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐபிஎல் எந்த அளவிற்கு புகழ் அடைந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளில் சிக்கியது. அதில் நடைபெற்ற ஊழல், முறைகேடு, பி.சி.சி.ஐ-க்கு அவப்பெயர் தேடித் தரும் வகையில் நடந்து கொண்டது உட்பட லலித் மோடி மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, சட்ட விரோதமாக லலித் மோடி நாட்டை விட்டு தப்பி சென்றார்.
லண்டனில் தங்கியிருக்கும் அவர் ஐபிஎல் தொடர் குறித்தும், அரசியல் காட்சிகள் குறித்தும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது தனது காதலி சுஷ்மிதா சென்னுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.
56 வயதான லலித் மோடி கடந்த 2018ம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சுஷ்மிதா சென் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தமது ஆண் நண்பரான மாடல் ரோஹ்மன் என்பவரை பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் லலித் மோடி-சுஷ்மிதா சென் ஜோடி சுற்றுலா சென்று வந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
இருவருக்கும் திருமணம் முடிந்ததா என்ற நெட்டிசன்கள் எழுப்பிய கேள்விக்கு,’ இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் தான் செய்து வருகிறோம். விரைவில் திருமணமும் ஒருநாள் நடக்கலாம் எனவும் லலித் மோடி தெரிவித்துள்ளார்.