சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் முரளி விஜய்

இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முரளி விஜய் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 2008ம் ஆண்டு அறிமுகமானவர் முரளி விஜய். வலது கை…

இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முரளி விஜய் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் 2008ம் ஆண்டு அறிமுகமானவர் முரளி விஜய். வலது கை பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்தியாவுக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் முரளி விஜய் விளையாடியுள்ளார்.

61 டெஸ்ட் போட்டிகளில் 3982 ரன்கள் அடித்துள்ள 15 அரைசதங்களும் 12 சதங்களும் அடங்கும். 17 ஒருநாள் போட்டிகளில் 339 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு அரைசதம் அடங்கும். 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முரளி விஜய் 169 ரன்கள் அடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் தனது மிகச் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய முரளி விஜய் 2014ம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது வலிமையான பந்துவீச்சுக்கு இடையே 1000 பந்துகளை எதிர்கொண்டார். 2018ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியே முரளி விஜய்க்கு கடைசி போட்டியாக அமைந்தது. அதன் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் அவர் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரிக்கெட் சார்ந்து உள்ள தொழில்களில் உள்ள வாய்ப்புகளை கண்டறியபோகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் முரளி விஜய், பிசிசிஐ நம்பி சோர்ந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் வெளிநாடுகளில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் முரளி விஜய் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.