தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவாரூர் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த செய்த நாகப்பட்டினம் மாவட்டம் கீவளூர் பகுதியை சேர்ந்த ரஞ்சன் என்பவர் உரிய ஆவணமின்றி இந்திய நாட்டு பணம் அறுபத்து மூவாயிரம் ரொக்கம் மற்றும் மலேசிய நாட்டு கரன்சி இந்திய மதிப்பில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் என மொத்தம் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை பறிமுதல் செய்து நகர்புற தேர்தல் நடத்தும் அலுவலர் நகராட்சி ஆணையர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சூரக்குடி அருகே திருப்பத்தூர் பறக்கும் படை தனி வட்டாட்சியர் சிவசம்போ தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தினகரன் என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை வட்டாட்சியர் அதனை காரைக்குடி கருவூலத்தில் ஒப்படைத்தார்.
அண்மைச் செய்தி: கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்து: நிர்வாகிகள் மீதான வழக்குகள் ரத்து
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுக்கோட்டை சாலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்ததால், காரில் இருந்த விவேகானந்தனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்காக பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், காரிலிருந்த 8 லட்சத்திற்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு எந்தவிதமான ஆவணங்களும் இல்லை என்பதால், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.