மோடி சர்வ வல்லமையோடு இருக்கிறார். கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைவரும் இணைந்து இருந்தால் தான் மோடியை வீழ்த்த முடியும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாடு மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இன்று தொடங்கிய மாநில மாநாட்டில் கருத்தரங்கம், சொற்பொழிவு, புத்தகக் கண்காட்சி, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இம்மாநாடு வளாகத்தில் மறைந்த கலைஞர்களின் புகைப்பட திறப்பு நிகழ்ச்சியும்,
வளாகத்தில் பல்வேறு வகையான புத்தகக் கண்காட்சி, நாணய கண்காட்சி, ஓவியக்
கண்காட்சி போன்றவை நடைபெற்றன. மேலும், மாநாடு விழாவில் குழந்தைகளின்
சிலம்பாட்டம், பறை இசை கலைஞர்களின் பறையாட்டம் போன்றவை நடைபெற்றன.
பின்னர், இந்த மாநாட்டில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், நாட்டில்
பொய்யான பிரச்சாரத்தையும், பொய்யான வரலாற்றையும் உருவாக்கக்கூடிய இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் மற்றும் அதனை சார்ந்த இயக்கங்கள். இவை மிக கடுமையாக முன்னேறி உள்ளன. ஆர்எஸ்எஸ் பரப்பும் விஷம் பற்றி ஒன்றுமே அறியாத மாநிலங்களாக தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களில் இந்த விஷம் பரவி உள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களைப் பரப்புவதற்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி வரலாம். ஒரு மருத்துவர் வரலாம். ஒரு நடிகர் வரலாம் என்றார்.
மாநில மாநாட்டில் பேசிய தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பிரதமராக யார் வரக் கூடாது என்பதில் நாம் அனைவரும் இணைந்து இருந்தால்தான் மோடியை வீழ்த்த முடியும். மோடி சர்வ வல்லமையோடு இருக்கிறார். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால், பாஜகவுக்கு கொள்கை எதுவும் கிடையாது. அவர்களின் ஒரே கொள்கை இந்த நாட்டை பிரித்தாள்வது மட்டுமே.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்படி கிடையாது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். மேலும், திமுக இந்துக்களுக்கு எதிரானது அல்ல.தமிழகத்தில் எல்லா வகையிலும் நல்ல ஆட்சி செய்து வருகிறார் ஸ்டாலின்.
எங்களுடைய ஆட்சியில் எல்லா கூட்டணி கட்சிகளையும் ஆதரிக்கிறோம். அவ்வாறு இணைந்து செயல்படுகிறோம். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி செய்யாத வேலையை நாம் செய்ய வேண்டும். ஆனால், ஆர்எஸ்எஸ் இன் கொள்கை என்பது ஏழை ஏழையாகவே இருக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
இம்மாநாட்டில், விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.R.ரகுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.