பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள்!

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் ஆனந்த் ஆகியோர் பாஜக-வில் இணைந்தனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச்…

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் ஆனந்த் ஆகியோர் பாஜக-வில் இணைந்தனர்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் முடிவடைந்து கடந்த மாதம் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.  இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் ஆனந்த் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்தனர்.  கர்தார் சிங், ராஜ்குமார் ஆனந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோர் டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஜூலை 10) பாஜகவில் இணைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.