கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,43,144 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,43,144 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியா கொரோனவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் புதிதாக 3,44,776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 2,40,46,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 2,62,317 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். மேலும் நேற்றைய தினத்தில் 3,44,776 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை 2,00,79,599 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது 37,04,893 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுவரை 17,92,98,584 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.